×

வரும் மக்களவை தேர்தலில் அசாருதீன், நடிகர் ராஜ்பப்பர் மும்பையில் போட்டியிட விருப்பம்

மும்பை: வரும் மக்களவை தேர்தலில் நடிகர் ராஜ்பப்பர் மற்றும் கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஆகியோர் மும்பையில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வரும் மக்களவை தேர்தலை சந்திக்க மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகிவிட்டன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி உறுதியாகிவிட்டது. சிவசேனாவும், பாஜ.வும் கூட்டணி  அமைக்குமா என்ற கேள்வி இருந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டதால் அது வலுவான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் மும்பையில் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வரும் நடிகை நக்மா மும்பையில் போட்டியிட  விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் மற்றும் தெலங்கானா காங்கிரஸ் தலைவரும் மாஜி கிரிக்கெட் வீரருமான அசாருதீன் ஆகியோர் மும்பையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்பம்  தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் அளித்த பேட்டி:மும்பையில் போட்டியிட விரும்புவதாக அசாருதீன் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதேபோன்று ராஜ்பப்பரும்  மும்பையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். 2014ம் ஆண்டு தேர்தலில் மும்பையில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற  முடியவில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. நரேந்திர மோடி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு சஞ்சய் நிரூபம் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajapara ,election ,Azharuddin ,Lok Sabha ,Mumbai , Azharuddin ,actor ,coming,Lok Sabha election
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...